3043. சிற்றிடை யுமையொரு பங்க னங்கையில்
  உற்றதோர் எரியினன் ஒரு சரத்தினால்
வெற்றிகொள் அவுணர்கள் புரங்கள் வெந்தறச்
செற்றவன் உறைவிடம் திருவிற் கோலமே.        2

     2. பொ-ரை: சிறிய இடையையுடைய உமாதேவியைத் தம்
திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு, அழகிய கையில் நெருப்பு
ஏந்தி விளங்கும் சிவபெருமான், ஓர் அம்பால் அசுரர்களின் மூன்று
புரங்களும் வெந்தழியுமாறு போர்செய்து வெற்றி கொண்டவர்.
அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் திருவிற்கோலம் என்னும்
கோயிலாகும்.

     கு-ரை: சரம் - அம்பு. ஒரு சரத்தினால் செற்றவன்
(அழித்தவன்) என்றமையானே புரங்கள் மூன்றென்பதும் பெற்றாம்.
“ஏகம்பர் தங்கையில் ஓரம்பே முப்புரம் உந்தீபற” என்னும்
திருவாசகமும் (தி.8 பா.296) காண்க.