| 
         
          | 3045. | விதைத்தவன் முனிவருக் கறமுன் காலனை |   
          |  | உதைத்தவன் 
            உயிரிழந் துருண்டு வீழ்தரப் புதைத்தவன் 
            நெடுநகர்ப் புரங்கள் மூன்றையும்
 சிதைத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே.    4
 |  
            4. 
        பொ-ரை: இறைவன் சனகாதி முனிவர்கட்கு அறக்கருத்துக்களை நன்கு பதியும்படி உபதேசித்தவன்.
 மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைக் காலால்
 உதைத்து உருண்டு விழும்படி செய்தவன். திரிபுரங்கள் மூன்றையும்
 எரித்துச் சாம்பலாகுமாறு சிதைத்தவன். அப்பெருமான்
 வீற்றிருந்தருளுகின்ற இடம் திருவிற்கோலம் என்பதாம்.
       கு-ரை: 
        முனிவர்க்கு - சனகாதி முனிவர்களுக்கு. அறம் முன் விதைத்தவன் - சரியையாதி நாற்பதப் பொருள்களையும் மனத்தில்
 பதிய உபதேசித்தவன். அறம் என்பதை சரியை கிரியை
 இரண்டினையும் குறிக்கும். அதனை நல்ல சிவதன்மத்தால்
 எனவரும் திருக்களிற்றுப் படியாரால் அறிக. ஈண்டு அறம்
 முடிவான ஞானத்தின் மேலது. விதைத்தவன் என்றதனால்
 சிவானந்தப் பெரும்போகம் விளைந்தமையும் காண்க.
 |