| 
       
	   
         
          | 3050. | சீர்மையில் சமணொடு சீவ ரக்கையர் |   
          |  | நீர்மைஇல் 
            உரைகள்கொள் ளாத நேசர்க்குப் பார்மலி பெருஞ்செல்வம் பரிந்து நல்கிடும்
 சீர்மையி னான்இடம் திருவிற் கோலமே.        10
 |  
             10. 
        பொ-ரை: இறையுண்மையை உணரும் தன்மையில்லாத சமணர்களும், புத்தர்களும் கூறும் உரைகளைக் கொள்ளாது, இறை
 நம்பிக்கையுடன் அவன்மீது பக்தி செலுத்துபவர்கட்கு உலகில்
 பெருஞ்செல்வத்தைப் பரிவுடன் இறைவன் தருவான். அத்தகைய
 மேன்மையுடைய பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம்
 ஆகும்.
       கு-ரை: 
        சீர்மை - ஒழுங்கு. நான்காமடியிற் சீர்மை - மேன்மை. சீர்மை சிறப்பொடு நீங்கும் (குறள் - 195) என்பதிற்போல, சமணர்
 என்ற சொல் சமண் என விகுதி குன்றி வந்தது; தூது, அரசு
 அமைச்சு என்றாற் போல். சீவரம் - புத்தமதத் துறவி யுடுத்தும் காவி
 ஆடை. கையர் வெறுக்கத் தக்கவர். கைத்தல் - வெறுத்தல்.
 |