| 
         
          | 3051. | கோடல்வெண் பிறையனைக் கூக மேவிய |   
          |  | சேடன 
            செழுமதில் திருவிற் கோலத்தை நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
 பாடல்வல் லார்களுக் கில்லை பாவமே.       11
 |        11. 
        பொ-ரை: வளைந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனைச் சடையில் சூடி, கூகம் என்னும் ஊரில், அழகிய, வளமையான
 மதில்களையுடைய திருவிற்கோலம் என்னும் திருக்கோயிலில்
 வீற்றிருந்தருளும் சிவபெருமானை நினைத்துத் தமிழ் ஞானசம்பந்தன்
 பாடல்களைப் பாட வல்லவர்கட்குப் பாவம் இல்லை.
       கு-ரை: 
        கோடல் - கோடுதல்; வளைதல். சேடன - சிவ பெருமானுடைய (திருவிற்கோலத்தை).
 |