|  3052. | 
           மண்ணின்நல் 
            லவண்ணம் வாழலாம் வைகலும் | 
         
         
          |   | 
          எண்ணின்நல் 
            லகதிக்கி யாதுமோர் குறைவிலை 
            கண்ணினல் லஃதுறங் கழுமல வளநகர்ப் 
            பெண்ணினல் லாளொடும் பெருந்தகை                             யிருந்ததே.     1 | 
         
       
	
             1. 
        பொ-ரை: உயிர்கள் இப்பூவுலகில் வளமோடு இன்பவாழ்வு  
        வாழலாம். தினந்தோறும் இறைவனை நினைத்து வழிபட யாதொரு  
        குறையுமிலாத முக்தியின்பமும் பெறலாம். இத்தகைய பேற்றினை  
        அளிக்கும் பொருட்டே கண்ணுக்கினிய நல்ல வளத்தையுடைய  
        கழுமலம் என்னும் ஊரில் பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியோடு  
        பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். 
            கு-ரை: 
        கதிக்கியாதும் - கதிக்கு+யாதும். ஓர் குறை இ(ல்)லை.  
        கண்ணின் நல்லது உறும் - கண்ணுக்கினிய நல்லவளத்தையுடைய.  
        கழுமலவளநகர் கண்ணின் நல்லஃது.  
	 |