|  3057. | 
          மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல | 
         
         
          |   | 
          கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச் 
		சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும் 
	பெற்றெனை யாளுடைப் பெருந்தகை யிருந்ததே.     6 | 
         
       
	
       
            6. 
        பொ-ரை: நெஞ்சமே! இறைவனைத் தவிர மற்றோர் பற்று  
        எதுவுமில்லை. நான்கு வேதங்களையும் நன்கு கற்று, கற்றதன்படி  
        ஒழுகுகின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருக்கழுமலம் என்னும்  
        வளநகரில் சிற்றிடையும், பெரிய அல்குலும் உடைய, அழகிய  
        ஆபரணங்கள் அணிந்த உமாதேவியோடு, என்னை ஆட்கொண்ட  
        பெருந்தகையாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார். 
            கு-ரை: 
        பெற்று எனை ஆளுடைப் பெருந்தகை. "யாவருக்குந்  
        தந்தைதாய் எனுமிவரிப்படியளித்தார் ஆவதனால் ஆளுடைய  
        பிள்ளையார் ஆய் அகில தேவருக்கும் முனிவருக்கும் தெரிவரிய  
        பொருளாகும் தாவில் தனித்திரு ஞானசம்பந்த ராயினார்" என்னும் பெரிய புராணம் நோக்குக. 
     
       |