| 
         
          | 3060. | நெடியவன் பிரமனும் நினைப்பரி தாய்அவர் |   
          |  | அடியொடு முடியறி யாஅழல் உருவினன் கடிகமழ் பொழில்அணி கழுமல வளநகர்ப்
 பிடிநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.     9
 |  
   
             9. 
        பொ-ரை:  நினைந்துருகும் தன்மையில்லாத திருமாலும், பிரமனும் அடிமுடி அறியாவண்ணம் சிவபெருமான் அழலுருவாய்
 ஓங்கி நின்றனன். நறுமணம் கமழும் சோலைகளை உடைய
 திருக்கழுமலம் என்னும் வளநகரில் பெண்யானையின் நடைபோன்று
 விளங்கும் நடையை உடைய உமாதேவியோடு பெருந்தகையாகிய
 சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.
       கு-ரை: 
        நினைந்துருகும் தன்மையில்லாதவர்களாகிய பிரம விட்டுணுக்களால் அறியமுடியாத அழல் உருவாய் நின்றவன்.
 அரிது - இன்மைமேல் நின்றது. "மனக்கவலை மாற்றலரிது"
 என்புழிப்போல. (திருக்குறள்).
 |