| 
         
          | 3067. | விண்ணுலா வும்நெறி வீடுகாட் டும்நெறி |   
          |  | மண்ணுலா வும்நெறி மயக்கந்தீர்க் கும்நெறி தெண்ணிலா வெண்மதி தீண்டுதே வன்குடி
 அண்ணலா னேறுடை அடிகள்வே டங்களே.     5
 |  
       
	        5. 
        பொ-ரை: ஒளிரும் சந்திர மண்டலத்தைத் தொடும் திருந்துதேவன்குடியில் இடப வாகனத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானின் 
        திருவேடம், இப்பூவுலகில் வாழும் நன்னெறியைக்
 காட்டி, தத்துவங்களே தான் என மயங்குவதைத் தீர்க்கும்.
 சிவலோகம் செல்லும் நெறிகாட்டும். முக்தி நெறி காட்டும்.
       கு-ரை: 
        விண்-சுவர்க்கலோகம்:-போகபூமி. மதி தீண்டும்-சந்திர மண்டலத்தை யளாவிய, தேவன்குடி.
 |