| 
         
          | 3095. | தண்வயல் புடையணி சக்கரப் பள்ளியெம் |   
          |  | கண்ணுத லவனடிக் கழுமல வளநகர் நண்ணிய செந்தமிழ் ஞானசம் பந்தன்சொல்
 பண்ணிய விவைசொலப் பறையுமெய்ப் பாவமே.   11
 |   
       
		
            11. 
        பொ-ரை: குளிர்ந்த வயல் சூழ்ந்த வளமை நிறைந்த அழகிய திருச்சக்கரப்பள்ளியில் எம்முடைய, நெற்றிக்கண்ணையுடைய
 சிவபெருமானின் திருவடிகளை, திருக்கழுமல வளநகரில் அவதரித்த
 செந்தமிழ் வல்ல ஞானசம்பந்தன் போற்றிய இத்திருப்பதிகத்தைப்
 பக்தியுடன் பாடுபவர்களின் பாவம் நீங்கும்.
       கு-ரை: 
        மெய்ப்பாவமே-உடம்பினாற் செய்த பாவம் . எனவே ஏனைக்கரணங்களாற் செய்த பாவமும் அடங்குதலறிக.
 
       |