| 
         
          | 3101. | பாலனார் ஆருயிர் பாங்கினால் உணவரும் |   
          |  | காலனார் 
            உயிர்செகக் காலினால் சாடினான் சேலினார் கண்ணினாள் தன்னொடுஞ் சேர்விடம்
 மாலினார் வழிபடும் மாமழ பாடியே.         
               6
 |  
      
             6. 
        பொ-ரை: பாலனான மார்க்கண்டேயனின் வாழ்நாள் முடிந்ததும் அவன் ஆருயிரைக் கவரவந்த காலனின் உயிர்
 அழியும்படி அவனைக் காலால் உதைத்த சிவபெருமான், சேல்மீன்
 போன்ற கண்களையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும்
 இடம் திருமால் முதலான பெருமையுடையவர்கள் வழிபடும்
 சிறப்புமிக்க திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும்.
       கு-ரை:பாலனார்-மார்க்கண்டேயர். 
        பாங்கினால்:-அளந்த வாழ்நாள் முடிந்தவர் உயிரைக்கவரத் தனக்கு இறைவன் அளித்த
 ஆளை இங்குப், பாங்கு எனப்பட்டது. செக-அழிய. காலன்
 ஆகையினால் அவனைக் காலினாற் சாடினான் என்பது ஓர்
 சொல்நயம். சேல்-மீன். மாலினார்-திருமால். இறைவனை வழிபடும்
 பேறு உற்றமையின் மாலினார் எனச்சிறப்புக் கிளவியாற் கூறினார்.
 |