| 
       
         
          | 3109. | பண்ணினார் 
            அருமறை பாடினார் நெற்றியோர் |   
          |  | கண்ணினார் 
            கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி விண்ணனார் விரிபுனல் மேவினார் சடைமுடி
 அண்ணலார் என்மையா ளுடையஎம் மடிகளே.                                               3
 |        3.பொ-ரை: 
        சிவபெருமான் அரிய வேதங்களை உரிய பண்ணோடு பாடியருளினார். அவர் நெற்றிக்கண்ணை உடையவர்.
 நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும்
 திருத்தலத்தில், ஆகாயத்திலிருந்து விரிந்த கங்கையைத் தாங்கிய
 சடைமடியுடையவராய் வீற்றிருந்தருளும் அச்சிவபெருமானே எம்மை
 ஆட்கொண்டருளும் எம் தலைவர் ஆவார்.
       கு-ரை: 
        பண்ணின் ஆர்-பண்ணோடு பொருந்திய. அருமறை பாடினார். ஆகாய கங்கை சடைமுடியின்கண் தங்கப்பெற்றவர்.
 |