3114. |
சிலைதனால் முப்புரஞ் செற்றவன் சீரினார் |
|
மலைதனால்
வல்லரக் கன்வலி வாட்டினான்
கலைதனார்
புறவணி மல்குகாட் டுப்பள்ளி
தலைதனால் வணங்கிடத் தவமது ஆகுமே. 8 |
8.
பொ-ரை: சிவபெருமான் மேருமலையை வில்லாகக்
கொண்டு முப்புரங்களை அழித்தவர். சிறப்புடைய கயிலை மலை
யினால் இராவணனின் வலிமையை அடக்கியவர். மான்கள் உலவும்
முல்லைநிலமான அழகு திகழும் திருக்காட்டுப்பள்ளி என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் பக்தியுடன்
தலைதாழ்த்தி வணங்க நல்தவப்பேறு உண்டாகும்.
கு-ரை:
இப்பாடலுள், தன் என்பன நான்கும் அசைகள்,
சீரின் ஆர்மலை, சிறப்பின் மிகுந்த மலை; கயிலை. உலகமெல்லாம்
அழியும் ஒவ்வோர் பிரளயத்திலும் தான் அழியாமை மட்டுமன்றி
வளரும் தன்மை உடையது. கலைதன் ஆர்புறவு-மானினத்தின்
நிலமாகப் பொருந்திய முல்லை நிலம். அந்நிலக் கருப்பொருள்களில்
ஒன்று மான்.
|