| 
       
         
          | 3115. | செங்கண்மால் 
            திகழ்தரு மலருறை திசைமுகன் |   
          |  | தங்கையால் 
            தொழுதெழத் தழலுரு ஆயினான் கங்கையார் சடையினான் கருதுகாட் டுப்பள்ளி
 அங்கையால் தொழும்அவர்க் கல்லல்ஒன் றில்லையே.  9
 |  
       
            9. 
        பொ-ரை: சிவந்த கண்களையுடைய திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் தொழுது போற்ற அழல் உருவமாய் விளங்கியவர்
 சிவபொருமான். கங்கையைச் சடையிலே தாங்கித் திருக்காட்டுப்பள்ளி
 என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அப்பெருமானை அழகிய
 கைகளால் கூப்பித் தொழும் அன்பர்கட்குத் துன்பம் இல்லை.
       கு-ரை: 
        கைபெற்ற பயன் கடவுளைத் தொழுவது, ஆதலால் கையால் தொழுது எனல் வேண்டா கூறலன்று கரம் தரும் பயன் இது
 என உணர்ந்து என்பது பெரியபுராணம்.
 |