3117. பொருபுனல் புடையணி புறவநன் னகர்மன்னன்
  அருமறை யவைவல் வணிகொள்சம் பந்தன்சொல்
கருமணி மிடற்றினன் கருதுகாட் டுப்பள்ளி
பரவிய தமிழ்சொல்லப் பறையுமெய்ப் பாவமே.    11

     11. பொ-ரை: நீர்வளமிக்க அழகிய புறவம் என்னும் பெயர்
கொண்ட சீகாழியில் அவதரித்த. அருமறைகளில் வல்ல,
சிவஞானத்தையே ஆபரணமாக அணிந்த ஞானசம்பந்தன், நீலமணி
போன்ற கண்டத்தையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும்
திருக்காட்டுப் பள்ளி என்னும் திருத்தலத்தை வணங்கிப் போற்றிய
இத்திருப்பதிகத்தை ஓத, பாவம் நீங்கும்.

     கு-ரை: புறவம் - சீகாழி. கருமணி - நீலமணி போன்ற.
மிடற்றினன் - கண்டத்தை யுடையவன். பரவிய - துதித்த. பறையும்
- நீங்கும்.