| 
         
          | 3117. | பொருபுனல் புடையணி புறவநன் னகர்மன்னன் |   
          |  | அருமறை யவைவல் வணிகொள்சம் பந்தன்சொல் கருமணி மிடற்றினன் கருதுகாட் டுப்பள்ளி
 பரவிய தமிழ்சொல்லப் பறையுமெய்ப் பாவமே.    11
 |        11. 
        பொ-ரை: நீர்வளமிக்க அழகிய புறவம் என்னும் பெயர் கொண்ட சீகாழியில் அவதரித்த. அருமறைகளில் வல்ல,
 சிவஞானத்தையே ஆபரணமாக அணிந்த ஞானசம்பந்தன், நீலமணி
 போன்ற கண்டத்தையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும்
 திருக்காட்டுப் பள்ளி என்னும் திருத்தலத்தை வணங்கிப் போற்றிய
 இத்திருப்பதிகத்தை ஓத, பாவம் நீங்கும்.
       கு-ரை: 
        புறவம் - சீகாழி. கருமணி - நீலமணி போன்ற. மிடற்றினன் - கண்டத்தை யுடையவன். பரவிய - துதித்த. பறையும்
 - நீங்கும்.
 |