3120. |
கோடல்சா லவ்வுடை யார்கொலை யானையின் |
|
மூடல்சா
லவ்வுடை யார்முளி கானிடை
ஆடல்சா லவ்வுடை யாரழ காகிய
பீடர்கோ யில்அர தைப்பெரும் பாழியே. 3 |
3.
பொ-ரை: அடியவர்களின் வேண்டுதல்களை ஏற்று
இறைவர் அருள்புரிபவர். கொல்லும் தன்மையுடைய யானையின்
தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர். அருவருக்கத்தக்க
சுடுகாட்டில் நடனம் புரிபவர். அழகிய பெருமையுடைய
அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப்
பெரும்பாழியே.
கு-ரை:
கோடல் - பிச்சை கொள்ளுதல். மூடல் - போர்வை;
தொழிலாகுபெயர். முளிகான்-சுடுகாடு. பீடர்-பெருமையுடையவர்.
|