3127. |
நாணிலா தசமண் சாக்கியர் நாடொறும் |
|
ஏணிலா தம்மொழி யவ்வெழி லாயவர்
சேணுலா
மும்மதில் தீயெழச் செற்றவர்
பேணுகோ யில்அர தைப்பெரும் பாழியே. 10 |
10.
பொ-ரை: சமணர்களும், புத்தர்களும் நாள்தோறும்
பெருமையற்ற சொற்களை மொழிகின்றனர். அவற்றை ஏலாது
அழகுடையவ ராய், ஆகாயத்தில் திரியும் முப்புரங்களை எரிந்து
சாம்பலாகுமாறு அழித்த சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும்
கோயில் திருஅரதைப் பெரும்பாழியே.
கு-ரை:
ஏண் இலாத மொழி-பெருமையற்ற சொற்கள்.
சேண்-ஆகாயம்.
|