3127. நாணிலா தசமண் சாக்கியர் நாடொறும்
  ஏணிலா தம்மொழி யவ்வெழி லாயவர்
சேணுலா மும்மதில் தீயெழச் செற்றவர்
பேணுகோ யில்அர தைப்பெரும் பாழியே.      10

     10. பொ-ரை: சமணர்களும், புத்தர்களும் நாள்தோறும்
பெருமையற்ற சொற்களை மொழிகின்றனர். அவற்றை ஏலாது
அழகுடையவ ராய், ஆகாயத்தில் திரியும் முப்புரங்களை எரிந்து
சாம்பலாகுமாறு அழித்த சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும்
கோயில் திருஅரதைப் பெரும்பாழியே.

     கு-ரை: ஏண் இலாத மொழி-பெருமையற்ற சொற்கள்.
சேண்-ஆகாயம்.