| 
         
          | 3128. | நீரினார் புன்சடை நிமலனுக் கிடமெனப் |   
          |  | பாரினார் பரவர தைப்பெரும் பாழியைச் சீரினார் காழியுள் ஞானசம் பந்தன்செய்
 ஏரினார் தமிழ்வல்லார்க் கில்லையாம் பாவமே.   11
 |        11. 
        பொ-ரை: கங்கையை மெல்லிய சடையில் தாங்கிய நிமலனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் எனப்
 பூவுலகத்தோரால் போற்றி வணங்கப்படும் திரு அரதைப்
 பெரும்பாழியைப் போற்றி, புகழுடைய சீகாழியில் அவதரித்த
 ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய இத்தமிழ்ப்பதிகத்தை ஓத
 வல்லவர்கட்குப் பாவம் இல்லை.
       கு-ரை: 
        நீரின்ஆர் - நீரினால் நிறைந்த. ஏரின் ஆர் - அழகால் நிறைந்த. தமிழ்வ(ல்)லார்க்கு இல்லையாம் பாவமே.
 |