| 
         
          | 3134. | சந்திரன் கதிரவன் றகுபுக ழயனொடும் |   
          |  | இந்திரன் 
            வழிபட விருந்தவெம் மிறையவன் மந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள்
 அந்தமி லழகனை யடிபணிந் துய்ம்மினே.        6
 |  
       
       
             6. 
        பொ-ரை: சந்திரன், சூரியன், மிகுபுகழ்ப் பிரமன், இந்திரன் முதலியோர் வழிபட விளங்கும் எம் இறைவனாய், வேதமந்திரங்கள்
 சிறப்படைய திருமயேந்திரப் பள்ளியில் வீற்றிருந்தருளும்
 அழிவில்லாத பேரழகனாகிய சிவபெருமானின் திருவடிகளை
 வணங்கி நன்மை அடைவீர்களாக.
       கு-ரை: 
        அந்தம் இல் அழகன் - பேரழகன்; மேல், "அந்தமில் அணி மலை மங்கை" எனக்கூறியதற்கேற்ப(தி.3 ப.27. பா.5.) இங்கு
 அந்தமில் அழகன் என்றதூஉம் காண்க.
 |