3134. |
சந்திரன் கதிரவன் றகுபுக ழயனொடும் |
|
இந்திரன்
வழிபட விருந்தவெம் மிறையவன்
மந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள்
அந்தமி லழகனை யடிபணிந் துய்ம்மினே. 6 |
6.
பொ-ரை: சந்திரன், சூரியன், மிகுபுகழ்ப் பிரமன், இந்திரன்
முதலியோர் வழிபட விளங்கும் எம் இறைவனாய், வேதமந்திரங்கள்
சிறப்படைய திருமயேந்திரப் பள்ளியில் வீற்றிருந்தருளும்
அழிவில்லாத பேரழகனாகிய சிவபெருமானின் திருவடிகளை
வணங்கி நன்மை அடைவீர்களாக.
கு-ரை:
அந்தம் இல் அழகன் - பேரழகன்; மேல், "அந்தமில்
அணி மலை மங்கை" எனக்கூறியதற்கேற்ப(தி.3 ப.27. பா.5.) இங்கு
அந்தமில் அழகன் என்றதூஉம் காண்க.
|