3135. |
சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட |
|
நடநவில் புரிவின னறவணி மலரொடு
படர்சடை மதியினன் மயேந்திரப் பள்ளியுள்
அடல்விடை யுடையவ னடிபணிந் துய்ம்மினே. 7 |
7.
பொ-ரை: சடைமுடியுடைய முனிவர்கள்
பூசைத்திரவியங்களைச் சேகரித்து வழிபட, திருமயேந்திரப்பள்ளியுள்
வீற்றிருந்தருளுபவனும், திருநடனம் செய்பவனும், தேன் துளிக்கும்
வாசனைமிக்க அழகிய மலர்களோடு பரந்து விரிந்த சடையில்
சந்திரனைச் சூடியவனும், வலிமையுடைய எருதினை வாகனமாக
உடையவனுமான சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நன்மை
அடைவீர்களாக!
கு-ரை:
சமைவு ஓடும் - சேகரித்த
பூசைத்திரவியங்களோடும்(வழிபட). சமைவு - சேகரித்தல்,
அமைத்தல். இங்கு ஆகுபெயர்.
|