| 
       
         
          | 3138. | உடைதுறந் 
            தவர்களு முடைதுவ ருடையரும் |   
          |  | படுபழி 
            யுடையவர் பகர்வன விடுமினீர் மடைவளர் வயலணி மயேந்திரப் பள்ளியுள்
 இடமுடை யீசனை யிணையடி பணிமினே.         10
 |  
             10. 
        பொ-ரை: ஆடையினைத் துறந்தவர்களாகிய சமணர்களும், மஞ்சள் உடை அணிபவர்களாகிய புத்தர்களும் மிக்க
 பழிக்கிடமாகக் கூறுவனவற்றைக் கேளாது விடுவீர்களாக. மடையின்
 மூலம் நீர் பாயும் வளமுடைய வயல்களையுடைய அழகிய
 மயேந்திரப்பள்ளியுள் வீற்றிருந்தருளும் சிவபெருமானின்
 திருவடிகளை வணங்குவீர்களாக.
       கு-ரை: 
        உடை துறந்தவர் - சமணர். உடைதுவர் உடையவர் - மருதந்துவரினால் தோய்த்த காவி உடையையுடைய புத்தர். துவர்
 - இங்கு மருதந்துவர் மஞ்சட்காவியை யுணர்த்திற்று. மயேந்திரப்
 பள்ளியுள்; இடம் உடை - தனக்கு இடமாக உறைதலையுடைய
 முடை - தீ நாற்றம்.
 |