| 
       
         
          | 3147. | பொன்னுமா மணிகளும் பொருதிரைச் சந்தகில் |   
          |  | தன்னுளார் வைகையின் கரைதனிற் சமைவுற அன்னமா மயனுமா லடிமுடி தேடியும்
 இன்னவா றெனவொணான் ஏடகத் தொருவனே.  9
 |  
	        9. 
        பொ-ரை: பொன்னும், மணிவகைகளும், சந்தனம், அகில் ஆகிய மரங்களும் வீசுகின்ற அலைகள் வாயிலாகக் கொண்டுவந்து
 சேர்க்கப்படும் வைகையின் கரையில், அன்னப் பறவையாகப் பிரமன்
 திருமுடியையும், பன்றி வடிவாகத் திருமால் திருவடியையும் தேடியும்
 இன்னவெனக் காணொணாது விளங்கிய சிவபெருமான்
 திருவேடகத்தில் வீற்றிருந்தருளும் ஒப்பற்ற இறைவன் ஆவான்.
       கு-ரை: 
        பொருதிரை - கரையை மோதும் அலைகளாற் கொணர்ந்த பொன்னும், மணிகளும், சந்தனம் அகில் மரங்களும்
 கொண்ட வைகை.
 |