3162. |
உரையினா ருறுபொரு ளாயினா னுமையொடும் |
|
விரையினார்
கொன்றைசேர் சடையினார் மேவிடம்
உரையினா ரொலியென வோங்குமுத் தாறுமெய்த்
திரையினா ரெறிபுனற் றிருமுது குன்றமே. 4 |
4.
பொ-ரை: இறைவன் வேதத்தால் நுவலப்படும் பொருளாக
விளங்குபவன். உமாதேவியை உடனாகக் கொண்டு நறுமணம்
கமழும் கொன்றை மலரைச் சடைமுடியில் அணிந்தவன்.
அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், பக்தர்கள் உரைக்கும்
அரநாமத்தின் ஒலியென அலையோசை எழுப்பும், பெருகுகிற
மணிமுத்தாறுடைய திருமுதுகுன்றம் ஆகும்.
கு-ரை:
(சொல் வடிவாயிருப்பதோடு) சொல்லிற் பொருந்திய
பொருளும் ஆயினவன் சொல்லானைச் சொல்லார்ந்த
பொருளானை (அப்பர் பெருமான்) என்பதும் காண்க. சொல் வடிவு
அம்பிகை, பொருள் வடிவு இறைவன் என்ற
திருவிளையாடற்புராணத்தோடு மாறுபாடின்மை சிவம் சத்தி
அபேதத்தாற் கொள்க. விரை - வாசனை.
|