3166. காரினா ரமர்தருங் கயிலைநன் மலையினை
  ஏரினார் முடியிரா வணனெடுத் தானிற
வாரினார் முலையொடும் மன்னினார் மருவிடம்
சீரினார் திகழ்தருந் திருமுது குன்றமே.         8

     8. பொ-ரை: மழை பொழியும் கார்மேகம் போன்று உயிர்
கட்கு அருள்புரியும் சிவபெருமான் வீற்றிருக்கும் நன்மைதரும்
கயிலை மலையினை, அழகிய முடியுடைய இராவணன் எடுத்தபோது,
அவனை நலியச் செய்த இறைவன், கச்சணிந்த முலையுடைய
உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் சிறப்பு மிக்க
திருமுதுகுன்றம் ஆகும்.

     கு-ரை: கார் மேகம் - பருவம் அறிந்து பெய்யும் மேகம்
போல. பக்குவ நோக்கி ஆன்மாக்களுக்கு அருள் செய்ய வரலால்.
காரினார் - மேகம் போன்றவர். இராவணன் இறச் செய்து - என
ஒரு சொல் வருவிக்க, சொல்லெச்சம். சீரினார் - மேலோர்கள்.
திகழ்தரு - விளங்கி வாழ்கின்ற. (திருமுதுகுன்றம்).