| 
       
         
          | 3169. | திண்ணினார் புறவணி திருமுது குன்றரை |   
          |  | நண்ணினான் காழியுண் ஞானசம் பந்தன்சொல் எண்ணினா 
            னீரைந்து மாலையு மியலுமாப்
 பண்ணினாற் பாடுவார்க் கில்லையாம் பாவமே.     11
 |        11. 
        பொ-ரை: செழுமையான சோலைகளையுடைய திருமுதுகுன்றத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை மனம், வாக்கு, காயம் மூன்றும் ஒன்றுபட 
        வழிபட்டு, சீகாழியில் அவதரித்த
 ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தைப் பண்ணிசையோடு
 பாடவல்லவர்களின் பாவம் நீங்கும்.
       கு-ரை: 
        இயலுமாப் பண்ணினால் பாடுவார் கோழைமிடறாகக் கவி கோளுமில வாக இசை கூடும் வகையால் ஏழையடி யாரவர்கள்
 யாவைசொன சொல் மகிழும் ஈசன் (தி.3 ப.71.பா.1.) ஒப்பிடுக.
 பதிகக் குறிப்பு முதுகுன்றம் என்பதற்கேற்ப 1,5,7 இப்பாடல்களிற்
 குறிஞ்சி நில வருணனை கூறப்படுகிறது.
 |