9.
பொ-ரை: திருமாலும், பிரமனும் தேடியும் அடிமுடி
காணவொண்ணாதவாறு விளங்கிய, உலகிற்கு நிமித்த காரணமான
சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், இப்பூவுலக தேவர்கள்
என்று சொல்லப்படும் அந்தணர்கள் வேதம் ஓதித் தன்
திருவடிகளை வணங்குமாறு சிறந்த தெய்வத்தன்மையுடைய
புகழுடன் சிவபெருமான் விளங்கும் திருத்தென்குடித்திட்டை
என்பதாகும்.
கு-ரை:
காரணன் - உலகிற்கு நிமித்த காரணன் ஆகிய
சிவபிரான். சீர் அணங்கும்
- சிறப்பினால் தெய்வத்தன்மை வாய்ந்த.
புகழ்த் தென்குடித்திட்டை.
அணங்கும் - பெயரடியாகப்
பிறந்த பெயரெச்சம்.