3178. நாரணன் றன்னொடு நான்முகன் றானுமாய்க்
  காரணன் னடிமுடி காணவொண் ணானிடம்
ஆரணங் கொண்டுபூ சுரர்கள்வந் தடிதொழச்
சீரணங் கும்புகழ்த் தென்குடித் திட்டையே.       9

     9. பொ-ரை: திருமாலும், பிரமனும் தேடியும் அடிமுடி
காணவொண்ணாதவாறு விளங்கிய, உலகிற்கு நிமித்த காரணமான
சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், இப்பூவுலக தேவர்கள்
என்று சொல்லப்படும் அந்தணர்கள் வேதம் ஓதித் தன்
திருவடிகளை வணங்குமாறு சிறந்த தெய்வத்தன்மையுடைய
புகழுடன் சிவபெருமான் விளங்கும் திருத்தென்குடித்திட்டை
என்பதாகும்.

     கு-ரை: காரணன் - உலகிற்கு நிமித்த காரணன் ஆகிய
சிவபிரான். சீர்
அணங்கும் - சிறப்பினால் தெய்வத்தன்மை வாய்ந்த.
புகழ்த் தென்குடித்திட்டை.

     அணங்கும் - பெயரடியாகப் பிறந்த பெயரெச்சம்.