9. 
        பொ-ரை: திருமாலும், பிரமனும் தேடியும் அடிமுடி 
        காணவொண்ணாதவாறு விளங்கிய, உலகிற்கு நிமித்த காரணமான 
        சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், இப்பூவுலக தேவர்கள் 
        என்று சொல்லப்படும் அந்தணர்கள் வேதம் ஓதித் தன் 
        திருவடிகளை வணங்குமாறு சிறந்த தெய்வத்தன்மையுடைய 
        புகழுடன் சிவபெருமான் விளங்கும் திருத்தென்குடித்திட்டை 
        என்பதாகும்.
            கு-ரை: 
        காரணன் - உலகிற்கு நிமித்த காரணன் ஆகிய 
        சிவபிரான். சீர் அணங்கும் 
        - சிறப்பினால் தெய்வத்தன்மை வாய்ந்த. 
        புகழ்த் தென்குடித்திட்டை. 
           அணங்கும் - பெயரடியாகப் 
        பிறந்த பெயரெச்சம்.