3179. |
குண்டிகைக்
கையுடைக் குண்டரும் புத்தரும் |
|
பண்டுரைத்
தேயிடும் பற்றுவிட் டீர்தொழும்
வண்டிரைக் கும்பொழிற் றண்டலைக் கொண்டலார்
தெண்டிரைத் தண்புனல் தென்குடித் திட்டையே. 10 |
10.
பொ-ரை: கமண்டலம் ஏந்திய கையுடைய சமணர்களும்,
புத்தர்களும் சொல்லும் பொருத்தமில்லாத உரைகளைப் பற்றி
நில்லாதீர். வண்டுகள் ஒலிக்கும் சோலையின் உச்சியில் குளிர்ந்த
மேகங்கள் தவழ, தெளிந்த அலைகளையுடைய குளிர்ச்சியான
ஆறுபாயும் திருத்தென்குடித்திட்டைச் சார்ந்து இறைவனை
வழிபடுங்கள்.
கு-ரை:
பற்றுவிட்டீர்தொழும் - பற்றுவிட்டீர்களாகித்
தொழுமின்கள். விட்டீர் - முற்றெச்சம். தொழும் - ஏவற்பன்மை.
பொழில் தண்தலை
கொண்டல் ஆர் - சோலைகளின்
குளிர்ந்த உச்சியில் மேகங்கள் படியும்.
|