3183. கோங்கமே குரவமே கொன்றையம் பாதிரி
  மூங்கில்வந் தணைதரு முகலியின் கரையினில்
ஆங்கமர் காளத்தி யடிகளை யடிதொழ
வீங்குவெந் துயர்கெடும் வீடெளி தாகுமே.     3

     3. பொ-ரை: கோங்கு, குரவம், கொன்றை, பாதிரி, மூங்கில்
ஆகிய மரங்களைத் தள்ளிக் கொண்டுவரும் பொன்முகலி ஆற்றின்
கரையில் வீற்றிருக்கும் காளத்திநாதரின் திருவடிகளைத் தொழுது
போற்ற, பெருகிவரும் கொடிய துன்பம் கெடும். முத்திப்பேறு
எளிதாகக் கைகூடும்.

     கு-ரை: வீங்கு - வளர்ந்து வருகிற. வெந்துயர் - கொடிய
துயர். கன்மங்கள்; காரணத்தைக் காரியமாக உபசரித்தார்.