| 
         
          | 3207. | நாவிரித்தரன் றொல்புகழ்பல |   
          |  | பேணுவீரிறை 
            நல்குமின் காவிரித்தடம் புனல்செய்கண்டியூர்
 வீரட்டத்துறை கண்ணுதல்
 கோவிரிப்பய னானஞ்சாடிய
 கொள்கையுங்கொடி வரைபெற
 மாவரைத்தலத் தாலரக்கனை
 வலியைவாட்டிய மாண்பதே.           8
 |  
       
            8. 
        பொ-ரை: நாவால் சிவபெருமானது பழம்புகழ் போற்றும் அடியவர்களே! எனக்கு விடை கூறுவீர்களாக. காவிரியால் நீர்
 வளம்மிக்க திருக்கண்டியூர் வீரட்டானத்தில் வீற்றிருந்தருளுகின்ற
 நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான், பசுவிலிருந்து பெறப்படும் பால்,
 தயிர், நெய், கோசலம், கோமயம் ஆகிய பஞ்சகவ்வியங்களால்
 திருமுழுக்காட்டப்படும் தன்மையும், கொடி போன்ற பார்வதி
 அமைதி பெற, பெரிய கயிலைமலையில் தன் காற்பெருவிரலை
 ஊன்றி மலையின் கீழ் இராவணன் நெரியுமாறு செய்து அவன்
 வலிமையை அழித்த மாண்பும் என்கொல்?
       கு-ரை: 
        (அரன் தொல் புகழ்) நாவிரித்து, "உன் திருவார்த்தையை விரிப்பார்" என்பது திருவாசகம். புனல் - நீர்வளம்.
 செய் - உண்டாக்குகின்ற. கண்டியூர் வீரட்டம். கோ - பசுவினின்றும் கிடைக்கக் கூடிய. 
        விரிப்பயன் - பெரும் பயனையுடைய. ஆன்
 அஞ்சு ஆடிய - பஞ்சகவ்வியத்தை ஆடுகின்ற கொள்ளையும்,
 அரக்கனை வலியை வாட்டிய மாண்பும்.
       இறைநல்குமின் 
        - விடை அளியுங்கள். ஆனஞ் சாடுதல் - சத்துவ குணத்தைத் தரும். அதற்கு மாறாக அரக்கனை
 அடர்த்தலாகிய ரஜோகுண வினை புரிந்தமை ஏன்? கொடிவரை -
 கொடி போன்ற பார்வதி அமைதி உற, பெற.
 |