| 
         
          | 3219. | பூமகற்கு மரிக்குமோர்வரு |   
          |  | புண்ணியன்னடி போற்றிலார் சாமவத்தையி னார்கள்போறலை
 யைப்பறித்தொரு பொய்த்தவம்
 வேமவத்தைசெ 
            லுத்திமெய்ப்பொடி
 யட்டிவாய்சக திக்குநேர்
 ஆமவர்க்கெளி யேனலேன்றிரு
 வாலவாயர னிற்கவே.               9
 |  
            9. 
        பொ-ரை: பிரமனும், திருமாலும் அறியவொண்ணாத புண்ணியனான சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்காது,
 இறந்தோர்க்கு நீர்க்கடன் செய்பவர்போல் தலைமுடியைக் களைந்து,
 பொய்த்தவத்தால் துன்புறும் நிலையடையும்படி உடம்பை வாட்டி,
 பொருளற்ற உரைகளைக் கூறுகின்ற சமணர்கட்கு யான் எளியேன்
 அல்லேன், திருவாலவாயரன் என்னுள் துணை நிற்றலால்.
      கு-ரை: 
        பூமகன் - பிரமன், ஒய்வு அரு - நினைத்தற்கும் அரிய. சாம் அவத்தையினார் - இறந்தோர்க்கு நீர்க்கடன் செய்யும்
 நிலையுதயடையோர். அவத்தை - நிலைமை. வேம் - வருந்துகின்ற.
 பிறவினை விகுதி குன்றி நின்றது. மெய் - உடம்பில், பொடி அட்டி
 - நீராடாமையால் புழுதி படிந்து வாய் சகதிக்கு நிகர் ஆவார்.
 |