3221. எக்கராமமண் கையருக்கெளி
       யேனலேன்றிரு வாலவாய்ச்
சொக்கனென்னு ளிருக்கவேதுளங்
     கும்முடித்தென்னன் முன்னிவை
தக்கசீர்ப்புக லிக்குமன்றமிழ்
     நாதன்ஞானசம் பந்தன்வாய்
ஒக்கவேயுரை செய்தபத்து
     முரைப்பவர்க்கிட ரில்லையே.         11

     11. பொ-ரை: திருஆலவாய் இறைவன் சொக்கநாதன் என்
உள்ளத்தில் இருத்தலால், செருக்குடைய சமணர்கட்கு யான்
எளியவன் அல்லன் என்று பாண்டிய மன்னன் முன்னிலையில்
திருப்புகலியில் அவதரித்த தமிழ் நாதனாகிய ஞானசம்பந்தன்
வாய்மையோடு அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்குத்
துன்பம் இல்லை.

     கு-ரை: சொக்கன் - கண்டார் மயங்கி விழும்படியான
பேரழகுடையவன்.