3222. |
கல்லானீழல், அல்லாத்தேவை |
|
நல்லார்பேணார், அல்லோநாமே. 1 |
1.
பொ-ரை: கல்லால மரத்தின் நிழலில் சனகாதி
முனிவர்கட்கு அறநெறி உரைத்தருளிய சிவபெருமானை அன்றிப்
பிறிதொரு தெய்வத்தை மெய்யுணர்ந்த ஞானிகள் பொருளாகக்
கொள்ளார். நாமும் அவ்வாறே சிவனையன்றி வேறு தெய்வத்தை
வழிபடோம்.
கு-ரை:
கல்லால் நீழலில் அல்லாத்தேவை - கல்லாலின்
நிழலின் இருக்கும் தெய்வமாகிய சிவம் அல்லாத பிறிதொரு
தெய்வத்தை. நல்லார் - மெய்யுணர்ந்த ஞானிகள். பேணார் -
பொருளாகக் கொள்ளார். (ஆகையால்) நாமும் அல்லோம் -
நாங்களும் அவற்றைப் பொருட்படுத்தோம்.
|