3224. |
கல்லாநெஞ்சின், நில்லானீசன் |
|
சொல்லாதாரோ, டல்லோநாமே. 3 |
3.
பொ-ரை: இறைவனை இடைவிடாது தியானிக்காதவர்
உள்ளத்தில் அவன் நில்லான். ஆதலால் அப்பெருமானின்
பெருமைகளைப் போற்றாதவர்களோடு நாங்கள் சேரோம்.
கு-ரை:
கல்லாநெஞ்சில் - இடைவிடாது தியானிக்காத
உள்ளத்தில். நில்லான் ஆதலால் திருநாமம் அஞ்செழுத்தும்
செப்புதல், அவர் திறம் ஒருதரமேனும் சொல்லாதவரோடு நாங்களும்
சேரோம் என்பது பின்னிரண்டடிகளின் கருத்து.
'இன்னீரமிர்தன்னவள் கண்ணிணை மாரிகற்ப' என்ற சிந்தாமணியின்
உரையால் இப்பொருள் கொள்க.
|