3225. கூற்றுதைத்த, நீற்றினானைப்
  போற்றுவார்கள், தோற்றினாரே.     4

     4. பொ-ரை: மார்க்கண்டடேயரின் உயிரைக் கவரவந்த
கூற்றுவனைத் தன் திருப்பாதத்தால் உதைத்த, தன் திருமேனியில்
திருவெண்ணீற்றினைப் பூசியுள்ள சிவபெருமானைப் போற்றுபவர்களே
பிறந்ததன் பயனை அடைவர்.

     கு-ரை: தோற்றினார் - பிறந்த பயன் எய்துவர். "தோன்றிற்
புகழொடு தோன்றுக" - (திருக்குறள்) என்பதனோடு ஒப்பிடுக.