3230. |
பூவினானும், தாவினானும் |
|
நாவினாலும்,
நோவினாரே. 9 |
9.
பொ-ரை: தாமரைப் பூவின்மேல் வீற்றிருந்தருளும்
பிரமனும் உலகத்தைத் தாவிஅளந்த திருமாலும், இறைவனின்
திருமுடியையும், திருவடியையும் உடல்வருந்தித் தேடியும்
காணாதவர்களாய்ப் பின்னர் நாவால் அவனைப் போற்றி
உருகிநின்றனர்.
கு-ரை:
தாவினான் - உலகம் அளந்தவன்.- 'திருமால்
அடியளந்தான் தாஅயதெல்லாம்' என்ற திருக்குறளில் இப்பொருள்
காண்க.
|