| 
         
          | 3230. | பூவினானும், தாவினானும் |   
          |  | நாவினாலும், 
            நோவினாரே.            9 |        9. 
        பொ-ரை: தாமரைப் பூவின்மேல் வீற்றிருந்தருளும் பிரமனும் உலகத்தைத் தாவிஅளந்த திருமாலும், இறைவனின்
 திருமுடியையும், திருவடியையும் உடல்வருந்தித் தேடியும்
 காணாதவர்களாய்ப் பின்னர் நாவால் அவனைப் போற்றி
 உருகிநின்றனர்.
       கு-ரை: 
        தாவினான் - உலகம் அளந்தவன்.- 'திருமால் அடியளந்தான் தாஅயதெல்லாம்' என்ற திருக்குறளில் இப்பொருள்
 காண்க.
 |