3233. |
கருவார்கச்சித், திருவேகம்பத் |
|
தொருவாவென்ன,
மருவாவினையே. 1 |
1.
பொ-ரை: யாவற்றுக்கும் கருப்பொருளாக விளங்கும்
திருக்கச்சியேகம்பத்தில் வீற்றிருந்தருளும் ஒப்பற்ற சிவபெருமானைப்
போற்றி வணங்க வினைவந்து சாராது.
கு-ரை:
கரு - கர்ப்பம் ...... ஏக ஆம்பரம் - ஏகம்பம் என
மரீஇயிற்று. ஒற்றை மாமரத்தினடி, கோயிலின் பெயர். வினை -
வினைகள், பால்பகா அஃறிணைப்பெயர்.
|