3239. கரியின்னுரியன், திருவேகம்பன்
  பெரியபுரமூன், றெரிசெய்தானே.       7

     7. பொ-ரை: யானையின் தோலை உரித்துப் போர்த்துக்
கொண்ட இறைவனான திருவேகம்பப் பெருமான், தேவர்களைத்
துன்புறுத்திய அசுரர்கள் வாழ்ந்த மூன்றுபுரங்களையும்
எரியுண்ணும்படி செய்தார்.

     கு-ரை: பெரியபுரம் - தீமை செய்தலிற் பெரியதாகிய திரிபுரம்.