3240. |
இலங்கையரசைத், துலங்கவூன்றும் |
|
நலங்கொள்கம்பன்,
இலங்குசரணே. 8 |
8.
பொ-ரை: இலங்கை மன்னனான இராவணனைக்
கயிலைமலையின் கீழ் நெரியுமாறு காற்பெருவிரலை ஊன்றி, அவன்
நலத்தை அழித்த திருவேகம்பன் திருவடியைச் சரணடைதலே
ஒளிமிக்க வாழ்விற்குரிய வழியாகும்.
கு-ரை:
துலங்க - அவன் வலி இது என்பது அனைவருக்கும்
விளங்க. கம்பன் - ஏகம்பன் என்பதன் ஒருபுடைப்பெயர்.
|