|  
       
       
	   
         
          | 3241.  | 
          மறையோனரியும், அறியாவனலன் | 
         
         
          |   | 
          நெறியேகம்பம், 
            குறியாற்றொழுமே.      9 | 
         
       
	
       
            9. 
        பொ-ரை: பிரமனும், திருமாலும் அறியமுடியாத வண்ணம்  
        நெருப்பு மலையாய் நின்ற சிவபெருமான் கச்சியில் திருவேகம்ப  
        நாதராக நெறியாகவும், போற்றித்தொழப் பெறும் குறியாகவும்  
        உள்ளார். 
            கு-ரை: 
        (அறியா) அனலன் - நெருப்பாகி நின்றவன்.  
     
	 |