| 
       
	   
         
          | 3242. | பறியாத்தேரர், நெறியில்கச்சிச் |   
          |  | செறிகொள்கம்பம், 
            குறுகுவோமே.      10 |  
       
       
       
           10 பொ-ரை: 
         தலைமயிர் பறியாத புத்தர்களும், அது 
        பறிக்கப்பட்ட சமணர்களும் கூறும் நெறியில் அமையாது, கச்சியில்
 ஞானம் பெருகும் திருவேகம்பநாதனின் திருக்கோயிலை அடைந்து
 வழிபடுவோமாக.
       கு-ரை: 
        பறியாத் தேரர் - தலைமயிர் பறியாத புத்தர்; என்ற இலேசானே அது பறிக்கப்பட்ட சமணரும் கூறியதாயிற்றாம்.
 நெறியில் - அவர்கள் வழியிற் சேர்தலில்லாத. கம்பம் - கோயில்.
 |