3253. வெள்ளைத்திங்கள் வாண்முக
       மாதர்பாட வீழ்சடைப்
பிள்ளைத்திங்கள் சூடியோ
     ராடன்மேய பிஞ்ஞகன்
உள்ளத்தார்சிற் றேமத்தா
     னுருவார்புத்த ரொப்பிலாக்
கள்ளத்தாரைத் தானாக்கியுட்
     கரந்துவைத்தான் அல்லனே.            10

     10. பொ-ரை: வெண்ணிறச் சந்திரன் போன்ற ஒளி திகழும்
முகமுடைய உமாதேவியார் பண்ணிசைத்துப்பாட, சடைமுடியில்
பிறைச்சந்திரனைச் சூடி, திருநடனம் செய்யும் இறைவன் விரும்பி
வீற்றிருந்தருளுவது திருச்சிற்றேமம் என்ற தலமாகும். அப்பெருமான்
புத்தர், சமணர் ஆகியோர்களைப் படைத்தும், அவர்கட்குத்
தோன்றாதவாறு மறைந்தும் விளங்குபவர்.

     கு-ரை: ஒப்பில்லாக் கள்ளத்தார் - என்றது சமணரை.