| 
         
          | 3255. | சந்த மார்முலை யாடன கூறனார் |   
          |  | வெந்த 
            வெண்பொடி யாடிய மெய்யனார் கந்த மார்பொழில் சூழ்தரு காழியுள்
 எந்தை யாரடி யென்மனத் துள்ளவே.           1
 |  
       
             1. 
        பொ-ரை: இறைவர் அழகிய திருமுலைகளையுடைய உமாதேவியாரைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர்.
 வெந்த திருவெண்ணீற்றினைப் பூசிய திருமேனி உடையவர்.
 நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த சீகாழியுள் வீற்றிருந்தருளிய
 என் தந்தையாராகிய சிவபெருமானின் திருவடிகள் என் மனத்தில்
 நன்கு பதிந்துள்ளன.
       கு-ரை: 
        முலையாள் தனகூறனார்; தன - தன்னதாகிய. இது குறிப்புப் பெயரெச்சம். கந்தம் - நறுமணம். ஈற்றடி, திருக்காளத்தி
 முதற் பாட்டின் (தி.3ப.36பா.1.) ஈற்றடியிலும் சிறிது மாறி வருகிறது.
 |