3262. எடுத்த வல்லரக் கன்முடி தோளிற
  அடர்த்து கந்தருள் செய்தவர் காழியுட்
கொடித்த யங்குநற் கோயிலு ளின்புற
இடத்து மாதொடு தாமு மிருப்பரே.           8

     8. பொ-ரை: திருக்கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த
வல்லரக்கனான இராவணனின் முடியும், தோளும் நெரியுமாறு
அடர்த்து, பின் அவன் எழுப்பிய சாமகானத்தால் மகிழ்ந்து அருள்
செய்த சிவபெருமான் சீகாழியில் கொடிகள் விளங்குகின்ற அழகிய
திருக்கோயிலுள் தம் திருமேனியின் இடப்புறத்தில் உமாதேவியை
உடனாகக் கொண்டு இன்புற வீற்றிருந்தருளுவர்.

     கு-ரை: கொடி - பதாகைகள். தயங்கும் - விளங்குகின்ற.
இடத்து - இடப்பாகத்திலுள்ள, மாது.