3265. கானல் வந்துல வுங்கடற் காழியுள்
  ஈன மில்லி யிணையடி யேத்திடும்
ஞான சம்பந்தன் சொல்லிய நற்றமிழ்
மான மாக்கும் மகிழ்ந்துரை செய்யவே.       11

     11. பொ-ரை: கரையிலுள்ள சோலைகளிலிருந்து நறுமணம்
வீசும் கடலை அடுத்த சீகாழியில், அழிவற்று என்றும் நித்தப்
பொருளாக விளங்கிடும் சிவபெருமானுடைய இரண்டு திருவடி
களையும் வணங்கிடும் ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை
மனமகிழ்ச்சியுடன் பாட அத்தமிழ் மேலான வீடுபேற்றைத் தரும்.

     கு-ரை: ஈனம் இல்லி - சிவபெருமான், காரணப்பெயர்.
மானம் - பெருமை. அது வீடு பேற்றைக் குறிக்கும். " உரைத்த நாற்
பயனுட் பெரும்பயன் ஆயது ஒள்ளிய வீடு, அது உறலால்
தரைத்தலைப் பேரூர் என்பர்கள் சிலர்" என்பது பேரூர்ப்புராணம்.