3266. |
வெந்த குங்கி லியப்புகை விம்மவே |
|
கந்த
நின்றுல வுங்கழிப் பாலையார்
அந்த மும்மள வும்மறி யாததோர்
சந்த மாலவர் மேவிய சாந்தமே. 1 |
1.
பொ-ரை: நெருப்பிலிடப்பட்ட குங்கிலியத்தின்
புகைப்பெருக்கால் நறுமணம் கமழும் திருக்கழிப்பாலையில்
வீற்றிருந்தருளும் சிவபெருமான் அழிவில்லாதவர். இன்ன தன்மையர்
என்று அளந்தறியமுடியாதவர். அப்பெருமானின் சாந்தநிலையும்
அளக்கொணாத தன்மையுடையதாகும்.
கு-ரை:
விம்ம - மிக. அந்தமும் அளவும் எனவே, ஏனைய
ஆக்கமும் கொள்ளப்படும். "ஆக்கம் அளவு இறுதியில்லாய்"
என்பது திருவாசகம். ஆக்கம் - பிறப்பு. அந்தம் - இறப்பு.
அறியாத - அறியப்படாத; செயப்படுபொருளுணர்த்தும் படுவிகுதி
குன்றியது, அறியப்பாடாத என்று கூறினாரேனும் இல்லாத என்பது
பொருள். சந்தம் - தன்மை. அது திருக்கோவையாரில் "அடிச்சந்தம்"
என வருவதாற் காண்க. அவர் மேவிய சாந்தம் - அவர் மேவிய
சாந்தநிலையும் அத்தகையதே (அறியப்படாததே). என்பது
குறிப்பெச்சம். ஆல் - ஆசை.
|