| 3268.  | 
          கொடிகொ ளேற்றினர் கூற்றை யுதைத்தனர் | 
         
         
          |   | 
          பொடிகொண் மார்பினிற் பூண்டதொ ராமையர் 
		கடிகொள் பூம்பொழில் சூழ்கழிப் பாலையுள் 
		அடிகள் செய்வன வார்க்கறி வொண்ணுமே.     3 | 
         
       
	  
       
            3. 
        பொ-ரை: இறைவர் எருதுக் கொடியுடையவர். காலனைக்  
        காலால் உதைத்தவர். திருநீறு அணிந்துள்ள மார்பில் ஆமையின்  
        ஓட்டினை ஆபரணமாக அணிந்தவர். நறுமணம் கமழும்  
        பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும்  
        அப்பெருமானின் செயல்களை யார்தான் அறிந்துகொள்ளமுடியும்?  
        ஒருவராலும் முடியாது. 
            கு-ரை: 
        கொடியின் கண் கொண்ட இடபத்தையுடையவர் -  
        இடபக்கொடியை உடையவர். ஆமை; ஆமையோட்டைக்  
        குறிப்பதால் முதலாகுபெயர். கடி - நறுமணம். 
      
	 |