3271. துள்ளு மான்மறி யங்கையி லேந்தியூர்
  கொள்வ னாரிடு வெண்டலை யிற்பலி
கள்வ னாருறை யுங்கழிப் பாலையை
உள்ளு வார்வினை யாயின வோயுமே.        6

     6. பொ-ரை: துள்ளுகின்ற இளமையான மானை, அழகிய
கையில் ஏந்தி, ஊர்தோறும் திரிந்து பிச்சை ஏற்கின்ற கள்வனாராகிய
சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கழிப்0பாலையை நினைந்து
ஏத்த வினையாவும் நீங்கும்.

     கு-ரை: இடுபலி வெண்டலையிற் கொள்வனார் எனக்கூட்டி
இடும் பிச்சையை வெண்தலை யோட்டிற் கொள்பவர் என்க.