| 
         
          | 3280. | பல்லி லோடுகை யேந்திப் பலிதிரிந் |   
          |  | தெல்லி வந்திடு காட்டெரி யாடுவான் செல்வ மல்கிய தென்றிரு வாரூரான்
 அல்ல றீர்த்தெனை யஞ்சலெ னுங்கொலோ.     4
 |  
            4. 
        பொ-ரை: இறைவர் பிரமனின் பல் இல்லாத மண்டையோட்டை ஏந்திப் பலி ஏற்றுத் திரிபவர். இரவில்
 சுடுகாட்டில் நடனம் புரிபவர். செல்வச் செழிப்பு மிக்க அழகிய
 திருவாரூரில் வீற்றிருந்தருளும் அப்பெருமான் என் துன்பத்தைத்
 தீர்த்து அஞ்சாதே என்று சொல்லி அருள்புரிவாரோ!
      கு-ரை: 
        பல் இல் ஓடு - பல்இல்லாத மண்டையோடு. |