3282. |
வார்கொண் மென்முலை யாளொரு பாகமா |
|
ஊர்க
ளாரிடு பிச்சைகொ ளுத்தமன்
சீர்கொண் மாடங்கள் சூழ்திரு வாரூரான்
ஆர்க ணாவெனை யஞ்சலெ னாததே. 6 |
6.
பொ-ரை: கச்சணிந்த மெல்லிய முலைகளையுடைய
உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு,
ஊரிலுள்ளவர்கள் இடுகின்ற பிச்சையை ஏற்கும் உத்தமனாய், செல்வ
வளமிக்க அழகிய மாடங்கள் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும்
சிவபெருமான் நான் வேறு யாரைச் சரணாகப் புகுந்துள்ளேன் என்று
கருதி அவன் என்னை அஞ்சாதே என்று கூறாமலிருக்கிறான்?
கு-ரை:
ஊர்களார் - ஊர்களிலுள்ளவர். சீர் - செல்வ வளம்
(இலட்சுமி கரம்). ஆர்கண் ஆக - யாரை யான் பற்றுக்கோடாக
உடையேன் எனக்கருதி, கண் - (சரண்புகும்) இடம்.
ஊர்களார் என்பதை
ஊரார்கள் என்று வழங்குவதோடு
ஒத்திட்டுணர்க.
|