| 
       
       
         
          | 3285. | நெடிய 
            மாலும் பிரமனும் நேர்கிலாப் |   
          |  | படிய வன்பனி 
            மாமதிச் சென்னியான் செடிக ணீக்கிய தென்றிரு வாரூரெம்
 அடிக டானெனை யஞ்சலெ னுங்கொலோ.         9
 |  
            9. 
        பொ-ரை: நீண்டு உயர்ந்த திருமாலும், பிரமனும் காணமுடியாத தன்மையராய்க்குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில்
 தாங்கிய இறைவர், மன்னுயிர்களின் பாவங்களை நீக்கி அழகிய
 திருவாரூரில் வீற்றிருந்தருளும் அடிகளாவார். அவர் என்னை
 அஞ்சாதே என்று அருள் புரிவாரோ!
       கு-ரை: 
        நேர்கிலா - சிந்திக்க மாட்டாத. கில் - ஆற்றல் உணர்த்தும் இடைச்சொல். படியவன் - தன்மையன், வடிவினன்
 எனலும் ஆம். செடிகள் - தீமைகள், பாவங்கள்.
 |