| 
         
          | 3286. | மாசு மெய்யினர் வண்டுவ ராடைகொள் |   
          |  | காசை போர்க்குங் கலதிகள் சொற்கொளேல் தேச மல்கிய தென்றிரு வாரூரெம்
 ஈசன் றானெனை யேன்றுகொ ளுங்கொலோ.   10
 |       10. 
        பொ-ரை: அழுக்கு உடம்பையுடைய சமணர்களும், துவராடை அணிந்த புத்தர்களும், கூறும் பயனற்ற சொற்களைக்
 கொள்ளாதீர், அருளொளி விளங்கும் அழகிய திருவாரூரில்
 வீற்றிருந்தருளும் எம் இறைவரான சிவபெருமான் என்னை ஏற்று
 நின்று அருள்புரிவாரோ!
       கு-ரை: 
        துவர் ஆடைமேற்கொள்ளும் - செந்நிறப் போர்வையைப் போர்க்கும். காசை - காஷாய உடை. திவ்வியப்
 பிரபந்தம் 1658. காசை மலர் போல்மிடற்றார். தேசம் - ஒளி.
 |